 |
|
|
பாகிஸ்தான் ராணுவத்தால் தலை வெட்டப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வீரரின் தலையை கண்டுபிடித்து ஒப்படைக்க கோரி அவரது தாயும் மனைவியும் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் கடந்த 8ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய பகுதியில் ஊடுருவி நமது வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இறந்த உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த மத்திய பிரதேசத்தை ஹேம்ராஜ், சுதாகர் சிங் ஆகிய 2 வீரர்கள் இறந்தனர். அவர் களது சடலத்தை பாகிஸ் தான் வீரர்கள் சிதைத்தனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
ஹேம்ராஜின் தலையற்ற உடல் மட்டுமே கிடைத்தது. இந்நிலையில், ஹேம்ராஜின் தாய் மீனாதேவி, மனைவி தர்மவதி ஆகியோர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
கொல்லப்பட்ட வரின் தலையை நாங்கள் பார்க்கவில்லை என்றும் எனவே, ஹேம்ராஜ்தான் கொல்லப்பட்டார் என்று எப்படி நம்ப முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். தலையை கண்டுபிடித்து ஒப்படைக்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர். ஹேம்ராஜ் குடும்பத்தி னரின் திடீர் போராட்டம் உ.பி.யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
|