இந்திய ராணுவ வீரர் ஹேம்ராஜின் தலையை தராவிட்டால் பாகிஸ்தானின் 10 வீரர்களின் தலையையாவது துண்டித்து எடுத்துவர வேண்டும் என்று பாஜக மூத்த
தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்தினரால் கோரமாக கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர்களில் ஹேம்ராஜ் என்பவரது தலையை பாகிஸ்தான் ராணுவத்தினர் எடுத்துச் சென்றுவிட்டனர். எடுத்துச் செல்லப்பட்ட தலையை பாகிஸ்தான் ஒப்படைக்க இந்தியா வலியுறுத்தி வருகிறது இந்நிலையில் ஹேம்ராஜூக்கு உரிய மரியாதை செலுத்தப்படவில்லை என்று கூறி அவரது உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள ஹேம்ராஜின் வீட்டுக்கு பாஜக தலைவர் நிதின் க்த்காரி, சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேரில் சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா, ஹேம்ராஜின் தலையை அவர்கள் கொடுக்காவிட்டால் அவர்களின் 10 தலையையாவது வெட்டிக் கொண்டுவர வேண்டும். எந்த ஒரு பதிலடி தராமலும் நாம் பேச்சுவார்த்தையில் உட்காரக் கூடாது. ஏதாவது ஒருவகையில் அரசு தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
|