![]() |
தனது பேரக்குழந்தைகளுடன் ஆனந்தமாக விளையாடும் கடாபி! | ||
| [ வெள்ளிக்கிழமை, 09 செப்ரெம்பர், 2011, ] | ||
லிபியாவில் கொடுங்கோல் ஆட்சி புரிந்த கடாபி தனது பேரக்குழந்தைகளுடன் ஆனந்தமாக விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கடுகடுத்த முகத்துடன் காணப்பட்ட கடாபியின் மனதுக்குள் ஒளிந்திருந்த இளகிய மனசை இந்த வீடியோ வெளிப்படுத்துவதாக உள்ளதுலிபியாவில் மக்கள் புரட்சி வெடித்து தற்போது நாடு போராளிகள் வசமாகியுள்ளது. இதனால் அதிபர் கடாபி நாட்டைவிட்டே வெளியேறிவிட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. கடாபியை பதவியில் இருந்து தூக்கிய பிறகும் லிபியாவில் அமைதி இல்லை. காரணம் யார் நாட்டை ஆளுவது என்று போராளிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இப்படி லிபியாவே கதிகலங்கி இருக்கும் வேளையில் திரிபோலியில் உள்ள தனது வீடு உள்ள பாப் அல் அஸீஸியா வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தல் ஒன்றில் கடாபி தனது பேரக்குழந்தைகளுடன் ஜாலியாக விளையாடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோவால் லிபியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது பழைய வீடியோ என்று தெரிகிறது. அந்த வீடியோவில் கடாபி தனது பேத்தியை கொஞ்சுகிறார், அவர் படுத்திருக்க பேத்தியும், பேரனும் அருகில் அமர்ந்து கொண்டு தாத்தாவிடம் கதை பேசிக் கொண்டிருக்கின்றனர், குடும்ப சகிதமாக அமர்ந்து உணவு உண்ணுகின்றனர், பேரக்குழந்தைகளுக்கு, தனது இரும்புக் கரத்தால் உணவு ஊட்டுகின்றார் கடாபி. இந்த காட்சிகளைப் பார்ப்பவர்கள் எப்பொழுது பார்த்தாலும் கடு, கடு என்று இருக்கும் கடாபிக்கு சிரித்துப் பேசி, விளையாடக் கூடத் தெரியுமா என்று அதிசயிக்கின்றனர். இந்த வீடியோ கடந்த 2005ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை (18/05/2013)
|
இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான் (19/05/2013)
|
தேனிலவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன் (19/05/2013)
|
பட்டினி போட்டு பணிப்பெண்ணை கொன்ற தம்பதியினர்: 24 ஆண்டு சிறை! (17/05/2013)
|
சிறுவர் காப்பக்கத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை (15/05/2013)
|
சிறுமிகளுடன் தகாத உறவு கொண்ட 60 வயது முதியவருக்கு 12 வருடம் சிறை (14/05/2013)
|


போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை









