web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

மும்பையில் நடந்த ஜோதிர்மய் டே கொலையில் பெண் பத்திரிகையாளர் கைது

[ சனிக்கிழமை, 26 நவம்பர், 2011, ]
மும்பையில் நடந்த ஜோதிர்மய்
மும்பை : பத்திரிகையாளர் ஜோதிர்மய் டே வழக்கில் மும்பையை சேர்ந்த பிரபல ஆங்கில நாளிதழின் மூத்த பெண் பத்திரிகையாளரை போலீசார் கைது செய்தனர். மும்பையில் வெளி யாகும் மிட்&டே ஆங்கில நாளிதழின் கிரைம் செய்தி பிரிவு

ஆசிரியர் ஜோதிர்மய் டே (56), கடந்த ஜூனில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக மும்பை தாதா சோட்டா ராஜனின் கூட்டாளிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, இவர்களுக்கு துப்பாக்கி சப்ளை செய்த வினோத் அஸ்ரானி, தீபக் சிசோடியா ஆகியோர் சிக்கினர்.

சோட்டா ராஜன் உத்தரவின் பேரில் டே கொல்லப்பட்டதாக விசாரணையில் உறுதியானது. தனது பரம எதிரியான தாவூத் இப்ராகிமுடன் நெருக்கமாக இருந்ததால் டேயை கொல்ல முடிவு செய்ததாக சோட்டா ராஜன் சமீபத்தில் கூறினான். இதற்கிடையே, மும்பை போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், டேவின் மொபைல் போன் எண், அவருடைய பைக் பதிவு எண் போன்ற விவரங்களை பிரபல ஆங்கில பத்திரிகையான ‘ஏசியன் ஏஜ்’&ல் பணியாற்றும் மூத்த பெண் பத்திரிகையாளர் ஜிக்னா ஓராவிடம் இருந்து சோட்டா ராஜன் பெற்றதாக கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஓராவை பலமுறை அழைத்து விசாரித்த போலீசார், நேற்று திடீரென கைது செய்தனர். சிறப்பு மொக்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை காவலில் வைத்து விசாரிக்க போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  தற்கொலைக்கு முயன்ற தாய் தப்பினார் கிணற்றில் வீசி 3 குழந்தை கொலை   (21/05/2013) 
  புது மாப்பிள்ளை கொலை ஏன்? காலால் மிதித்து தூக்கத்தை கெடுத்ததால் கொன்றோம்!   (21/05/2013) 
  உறவினர் திருமணத்துக்கு சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி   (21/05/2013) 
  வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கில் தொங்கினார்   (20/05/2013) 
  தயிரில் விஷம் கலந்து குடித்து மாமனார், மாமியார் தற்கொலை   (20/05/2013) 
  வாலிபர் கொடூர கொலை மேலும் 2 பேர் கைது   (20/05/2013) 
Published news:
  டாஸ்மாக் கடையில் 'சைட் டிஷ்' சண்டை… முந்திரிக் காட்டில் கொலையில் முடிந்த பரிதாபம்   (15/05/2013)
  இந்தியாவின் முதல் பெண் ஜவான் தூக்கில் பிணமாகத் தொங்கினார்!   (15/05/2013)
  ஜி.ஹெச்ல் குழந்தையை திருடி ரூ.4 லட்சத்துக்கு விற்ற துப்புரவு தொழிலாளி கைது   (14/05/2013)
  ஓட ஓட விரட்டி அண்ணன், தம்பி படுகொலை: நடுரோட்டில் கொடூரம்   (14/05/2013)
  4 மாத கர்ப்பிணி தாயை 11,000 ரூபாய்க்கு விற்ற பெண் கைது   (14/05/2013)
  கள்ளக் காதலுக்காக கணவனை கழுத்தறுத்துக் கொலை செய்த மனைவி!   (13/05/2013)