web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

'தப்பிக்க ஏதாவது வழியிருக்கா?' - கண்டியில் அமெரிக்க தூதரிடம் ராஜபக்சே ரகசிய பேச்சு!

[ வெள்ளிக்கிழமை, 09 மார்ச், 2012, ]
'தப்பிக்க ஏதாவது வழியிருக்கா?'
கண்டி: இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பட்ரீசியா புட்டீனிஸ் நேற்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கெதிரான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா, முன்வைத்துள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் அமெரிக்கத் தூதுவருடன் வேறு அதிகாரிகள் எவரும் பங்கு கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவுடன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரிஸ், வெளி விவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம, வெளிவிவகார அமைச்சின் கூடுதல் செயலர் சேனுகா செனிவிரத்ன மற்றும் மத்திய மாகாண முதல்வர் சரத் எக்கநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கெதிரான அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பாகவே இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சந்திப்பு நடந்த இடம் கூட ரகசியமாகவே வைக்கப்பட்டது. தகவல்கள் வெளியே கசியாமல் தவிர்க்கும் பொருட்டு, கண்டியில் உள்ள அதிபர் மாளிகையில் இந்த பேச்சுகள் நடந்ததாக தெரிகிறது.

கடைசி நேரத்தில் எப்படியும் தாம் காப்பாற்றப்பட்டுவிடுவோம் என்ற நம்பிக்கையில் இந்த முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது இலங்கை.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து