![]() |
சர்வதேச அழுத்தம் காரணமாகவே பொன்சேகா விடுதலை செய்யப்பட்டார் – சரத் என் சில்வா | ||
| [ வெள்ளிக்கிழமை, 25 மே, 2012, ] | ||
சர்வதேச ரீதியான அழுத்தங்கள் காரணமாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ததாக முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். சர்வதேச அழுத்தம் மற்றும் ஒக்ரோபர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கால அடிப்படையிலான மீளாய்வு ஆகிய காரணிகளின் அடிப்படையிலேயே இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவை அமெரிக்கா அரசியல் கைதியாக அடையாளப்படுத்தியதனைத் தொடர்ந்து இலங்கை மீதான மனித உரிமை மீறல் அழுத்தங்கள் வலுப்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவிற்கு முழுயைமான பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா கைது மற்றும் சிறைத் தண்டனை தெளிவான மனித உரிமை மீறலாகவே கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
வற்றாப்பளை அம்மன் ஆலய வேப்ப மரத்திலிருந்து பால் வடியும் அதிசயம்! (25/05/2013)
|
இலங்கை போர்க்குற்றவாளிகள் சுதந்திர பறவைகள்: சர்வதேச மன்னிப்புச் சபை! (25/05/2013)
|
வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்த வைத்தியர் (25/05/2013)
|
யாழில் வெசாக் பண்டிகை, பெருவிருப்புடன் தமிழர் பங்கேற்பு! (25/05/2013)
|
புத்தபிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை! (24/05/2013)
|
தண்ணீரென எண்ணி மண்ணெண்ணை அருந்திய குழந்தை உயிரிழப்பு (23/05/2013)
|


வற்றாப்பளை அம்மன் ஆலய வேப்ப மரத்திலிருந்து பால் வடியும் அதிசயம்!









