![]() |
மனித ரத்தத்தில் எரியும் விசித்திர விளக்கு: அமெரிக்க டிசைனரின் கைவண்ணம் | ||
| [ புதன்கிழமை, 30 மே, 2012, ] | ||
லண்டன்: மனித ரத்தத்தில் எரியும் விளக்கை அமெரிக்க டிசைனர் ஒருவர் வடிவமைத்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த டிசைனர் மைக் தாம்ப்சன். அவர் சற்று வித்தியாசமாக மனித ரத்தத்தில் எரியும் விளக்கை வடிவமைத்துள்ளார். அந்த விளக்கினுள் ரசாயனங்களை வைத்துள்ளார். அந்த கண்ணாடி விளக்கை எரிய வைக்க அதன் வாய்ப் பகுதியை உடைத்து அந்த துண்டைக் கொண்டு கையைக் கீறி ரத்தத்தை அந்த ரசாயனங்களில் விட வேண்டும். ரத்தம் ரசாயனங்களுடன் கலந்த பிறகு விளக்கு நீல நிறத்தில் பிரகாசிக்கிறது. இந்த விளக்கை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். மக்கள் மின்சாரத்தின் அருமை தெரியாமல் கண்டபடி வீணடிப்பதை உணர்த்தவே இந்த விளக்கை வடிவமைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். மனித உடலில் இருந்து ரத்தம் அதிகளவில் வெளியேறினால் அது எப்படி உயிருக்கு ஆபத்தோ, அதே போன்று தான் மின் சக்தியை அதிகம் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என்று அவர் மேலும் தெரிவித்தார். இது குறித்து அவர் தனது இணையதளத்தில் மேலும் கூறுகையில், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வகையில் இந்த விளக்கு இருப்பது, விளக்கு எப்பொழுது தேவையோ அப்பொழுது மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மக்களை சிந்திக்க வைக்கும். அவர்கள் எப்படி அக்கறையின்றி மின்சக்தியை வீணடிக்கிறார்கள் என்பதும் புரியும். சுவிட்சை போட்டால் லைட், பேன் உள்ளிட்ட மின்சாதனங்கள் வேலை செய்வதால் மின்சக்தி எங்கிருந்து வருகிறது என்பதைப் பற்றி மக்கள் சிந்திப்பதே இல்லை என்று கூறியுள்ளார். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
பாலுறவுகொள்ள மறுத்த காதலனின் ஆணுறுப்பை கடித்த காதலி (21/05/2013)
|
மேலாடை அணியாமல் பெண்கள் சுதந்திரமாக சுற்றித் திரியலாம்: நியூயார்க் போலீஸ் (21/05/2013)
|
இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான் (19/05/2013)
|
தேனிலவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன் (19/05/2013)
|
போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை (18/05/2013)
|


பாலுறவுகொள்ள மறுத்த காதலனின் ஆணுறுப்பை கடித்த காதலி









