web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

நல்லிணக்க ஆணைக்குழுவின் சகல முன்மொழிவுகளையும் அமுல்படுத்த முடியாது!

[ செவ்வாய்க்கிழமை, 12 யூன், 2012, ]
நல்லிணக்க ஆணைக்குழுவின்
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிண்கக்க ஆணைக்குழுவின் சகல முன்மொழிவுகளையும் அமுல்படுத்த முடியாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே ஏனைய கட்சிகளின் கருத்துக்களையும் கோரியுள்ளோம்.

குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் முன்மொழிவுகளை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சில முன்மொழிவுகளை அமுல்படுத்த மூன்று மாத காலம் எடுக்கும் இன்னும் சில முன்மொழிவுகளை அமுல்படுத்த ஐந்து முதல் பத்து வருடங்கள் எடுக்கலாம்.

30 ஆண்டு கால போரை மறந்து விட்டு இறுதி இரண்டு வார போர் பற்றியே சர்வதேச சமூகம் கவலையடைந்துள்ளது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் எட்டப்படும் தீர்வானது காத்திரமானதாக அமையும். தேசிய இனப்பிரச்சினைக்கு ஜனநாயக ரீதியில் தீர்வு எட்டுவதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு யோசனை முக்கியமானது.

இந்தத் தீர்வுத் திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்காமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு,… குதிரையை நீர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல முடியும், எனினும், குதிரைக்கு நீரை ஊட்டிவிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு யோசனைத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது, இதில் கலந்து கொள்வதும் கொள்ளாமல் விடுவதும் கூட்டமைப்பின் தீர்மானமாகும். கூட்டமைப்பை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைத்துக் கொள்வதற்கு கூடுதல் முனைப்பு காட்டப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள்  (20/05/2013) 
  வெளிநாடுகளிலுள்ள 10 பேருக்கு மரண தண்டனை: இலங்கையால் காப்பாற்ற முடியாது!  (20/05/2013) 
  வவுனியாவில் கொலையுண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையை நையப் புடைந்த இளைஞா் குழு!  (20/05/2013) 
  வாய் பேசமுடியாத சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குடும்பஸ்தர்   (20/05/2013) 
  யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு !   (19/05/2013) 
  பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தமிழ் வைத்தியர் தடுப்பு!   (19/05/2013) 
Published news:
  11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!   (14/05/2013)
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)
  நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது   (13/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)
  சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு   (10/05/2013)
  கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது   (10/05/2013)