![]() |
சவுதி இளவரசர் அமெரிக்காவில் மரணம் | ||
| [ சனிக்கிழமை, 16 யூன், 2012, ] | ||
சவுதி அரேபியாவின் இளவரசரான நயிப் பின் அப்துல் அஸிஸ் அல் சவுத் இன்று மரணமடைந்தார் என்று அந்நாட்டிலிருந்து செயல்படும் அல் அரேபியா செய்தி வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியா நாட்டில் மன்னராட்சி முறை நிலவி வருகிறது. இந்நாட்டின் இளவரசரும், துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராகவும் பதிவி வகித்து வந்த நயிப் பின் அப்துல் விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்காகவும், மருத்துவப் பரிசோதனைகளை செய்து கொள்வதற்காகவும் கடந்த மாத இறுதியில் அமெரிக்கா சென்றார்.
கடந்த ஜூன் 3 அன்று இளவரசர் உடல்நலமுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் நாடு திரும்புவார் என்றும் சவுதி அரசு அறிவித்திருந்தது. ஆனால் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்து விட்டதாக அத்தொலைகாட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது.
இவருக்கு 77 அல்லது 78 வயது இருக்கலாம். சவுதி அரசின் அடுத்த மன்னராக பதவியேற்கும் நிலையில் இருந்த நயிப் இறந்ததை அடுத்து, அவரது தம்பியும் ரியாத் மாகண கவர்னருமான சல்மான் அடுத்த இளவரசராக அறிவிக்கப்படுவார் எனத் தெரிகிறது. |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
பாலுறவுகொள்ள மறுத்த காதலனின் ஆணுறுப்பை கடித்த காதலி (21/05/2013)
|
மேலாடை அணியாமல் பெண்கள் சுதந்திரமாக சுற்றித் திரியலாம்: நியூயார்க் போலீஸ் (21/05/2013)
|
இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான் (19/05/2013)
|
தேனிலவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன் (19/05/2013)
|
போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை (18/05/2013)
|
பட்டினி போட்டு பணிப்பெண்ணை கொன்ற தம்பதியினர்: 24 ஆண்டு சிறை! (17/05/2013)
|


பாலுறவுகொள்ள மறுத்த காதலனின் ஆணுறுப்பை கடித்த காதலி









