web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. ஆட்சியை பிடிக்கும்: விஜயகாந்த்

[ வெள்ளிக்கிழமை, 29 யூன், 2012, ]
அடுத்த சட்டமன்றத் தேர்தலில்
தர்மபுரியை அடுத்த குண்டல்பட்டியில் தே.மு.தி.க. அவைத்தலைவர் தம்பி. ஜே.சங்கர் மகள் சிந்து-தியாகராஜன் திருமணத்தை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று காலை நடத்தி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. துணையுடன்தான் அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க எனக்கு விருப்பம் இல்லை. அன்றைய சூழ்நிலையில் தொண்டர்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். எனவே தொண்டர்கள் விருப்பத்திற்காகத்தான் நான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தேன்.

அ.தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்துகூட எந்தவித வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை. அரசியல்வாதிகள் 15 சதவீத கமிஷன் வாங்கிக் கொண்டு பணிகளை ஓதுக்குவதால் பணிகளை எடுக்க காண்டிராக்டர்கள் முன் வருவது இல்லை.

சேலம் மாநகராட்சியிலும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ஆட்சியாளர்கள் எந்த வழியில் லஞ்சம் வாங்குகிறார்களோ அதே வழியில் அவர்களைப் பின்பற்றி அதிகாரிகளும் லஞ்சம் வாங்குகிறார்கள்.

பள்ளி குழந்தைகளுக்கு பென்சில் உள்ளிட்ட கிப்ட் பொருட்களை பள்ளி திறந்தவுடன் வழங்குவோம் என்றனர். ஆனால் பள்ளி திறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. 40சதவீத மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே இந்த பொருட்களை வழங்கியதாக தகவல்கள் வருகின்றன.

தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்கள் ஏழை மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. அதை அரசு சரியாக பின்பற்றவில்லை. ஒரு மாதத்துக்கு பிறகு இப்போதுதான் கணக்கு எடுத்துக் கொண்டு இருப்பதாக சொல்கிறார்கள்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. ஆட்சியை பிடிக்கும். நாங்கள் மக்களுக்காக சேவை செய்யும் நோக்கத்தோடு இருப்பவர்களை மட்டுமே கட்சியில் சேர்த்துக் கொள்கிறோம். மற்றவர்களை கட்சியில் சேர்ப்பது இல்லை.

கேரளா நமக்கு தண்ணீர் தர மறுக்கிறது. அங்கு அணை கட்டி நமக்கு வரும் தண்ணீரை தடுக்க முயற்சிக்கிறது. ஆனால் இங்கு உள்ள மணலை கொள்ளையடித்து கேரளாவிற்கு விற்பனை செய்கிறார்கள். தமிழ்நாட்டில் மணல் கொள்ளை அதிகமாக நடக்கிறது.

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைப்பது இல்லை. இதனால் அவர்கள் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். இன்று வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. ஆட்சியாளர்கள் சரியாக இருந்து இருந்தால் வேலையில்லா திண்டாட்டம் வந்து இருக்காது.

வேலையில்லா திண்டாட்டத்திற்கு ஆட்சியாளர்களே காரணம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நன்றாக ஆட்சி செய்தார். அதனால் அவர் தொடர்ந்து 11 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க முடிந்தது. அதன் பின்னர் யாரும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடியவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பாஸ்கர் எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர் இளங்கோவன், தர்மபுரி நகர செயலாளர் வெங்கட்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை போட்டுத்தள்ளிய மனைவி! பரபரப்பு வாக்குமூலம்! (படம் இணைப்பு)   (19/06/2013) 
  வட-இந்தியாவில் மழைவெள்ளம்; 70 பேர் பலி, பலரைக் காணவில்லை   (19/06/2013) 
  2028ஆம் ஆண்டு இந்தியா சீனாவை முந்தும்... ஜனத்தொகையில்...   (18/06/2013) 
  கனிமொழியும் வேட்பு மனு தாக்கல் செய்தார்   (18/06/2013) 
  மணிவண்ணன் உடல் மீது புலிக்கொடி - இறுதி விருப்பத்தை நிறைவேற்றிய சீமான்  (15/06/2013) 
  சக மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்த மாணவி கைது   (15/06/2013) 
Published news:
  ஆரணியில் சோகம் ஸ்வீட்டில் விஷம் தடவி குழந்தையை கொன்று தந்தை, மகள் தற்கொலை  (12/06/2013)
  இன்று நடக்க இருந்த பிளஸ்-1 மாணவியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்   (12/06/2013)
  மனைவிய 40 கி.மீ தூரம் தோளில் சுமந்தவாறு மருத்துவமனையில் சேர்த்த இளைஞர்!   (11/06/2013)
  உளுந்தூர்பேட்டை அருகே ஒரு காலுடன் பிறந்த ஆண் குழந்தை   (10/06/2013)
  கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவர்   (10/06/2013)
  டெல்லி பல்கலைக்கழக மாணவி காரினுள் இருவரால் கற்பழிப்பு  (10/06/2013)